Wednesday, December 17, 2014

பெஷாவர் தாக்குதலில் இருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

 
      
பெஷாவர் தாக்குதலுக்கு கண்டனமும், மக்களுக்கு ஆறுதலும் சொல்லிகொண்டிருக்கும் வேளையில், இதிலிருந்து இந்தியர்களாகிய நாம் கற்றுக்கொள்ள போவது என்ன? பல மதங்கள் சார்ந்த, பல இனங்கள் சார்ந்த மக்கள் வாழும் ஒரு நாட்டின் அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதமோ இனமோ சாராமல் மத சார்பற்ற நடுநிலை அரசாக செயல் பட்டாலே அனைத்து மக்களுக்கும் எந்த ஒரு பாகுபாடுமின்றி நன்மைகளை செய்ய முடியும். அப்படி பாகுபாடின்றி செயல்பட்டாலே மக்களுக்குள் விரிசலும், மோதலும் இன்றி அவர்களை காக்கவும் பேதமின்றி நீதி வழங்கவும் முடியும். மக்களும் தங்கள் மத, இன நம்பிக்கைகளை தங்கள் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளிய மனிதர்களாக வாழ்வார்கள். அவ்வாறின்றி நடுநிலை தவறி எதோ ஒரு இனத்தையோ எதோ ஒரு மதத்தையோ சார்ந்து, அதை போற்றும் அரசாக இருந்தால் பேதமின்றி நீதி வழங்க இயலாது. நீதி வழங்க இயலாத அரசு மக்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வது சாத்தியம் ஆகாது. மக்கள் அவரவர் மதம், இனம் சார்ந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தி தங்களின் நம்பிக்கையே சிறந்தது என்று நிரூபிக்க வெறி கொண்டு கிளம்புவர். இதனால் எண்ணிப்பார்க்க இயலாத மோதல்களும், இழப்புகளும் மக்களுக்கு ஏற்ப்படும். அவ்வாறு பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழபின் ஒரு அங்கம் தான் பெஷாவர் தாக்குதலில் குழந்தைகளின் இழப்பு.

நம் நாட்டை மத சார்புடைய அரசு ஆளத்துவங்கியுள்ள இந்த  வேளையில் நாம் பாகிஸ்தானின் இழப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? நாம் ஒரு மதமோ அல்லது ஒரு இனமோ சார்ந்த நாடா? நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் உங்கள் மதத்தையோ உங்கள் இனத்தையோ தவிர மற்ற மதத்தினரையோ இனத்தினரையோ விரட்டியடித்து விட்டு இங்கு நீங்கள் மட்டும் வாழ்ந்துவிட முடியுமா?  அனைவரும்  தோழமையுடன் வாழ்வதை தவிர்த்து வேறு வழி தேடினால் என்ன மாதிரியான எதிர்வினைகள் ஏற்ப்படும்? நம் நாட்டிற்கு எது உகந்தது?

மதசார்பற்ற நடுநிலை அரசு!

Thursday, November 13, 2014

நான்கு வகை மனிதர்கள் - நான்காம் வகை நாசமாய் போனவர்கள்

என் தொழில் சார்ந்த மனிதர்களை நான்கு வகையாக பிரித்துப் பார்க்கிறேன். 1) மாணவர்கள், 2) பண்டிதர்கள், 3) பண்டித மாணவர்கள், 4) மாணவ பண்டிதர்கள்.

1.       மாணவர்கள்: எப்பொழுதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள். பரிச்சார்த்த முயற்ச்சிகளை செய்யத் தயங்காதவர்கள். (என் வாழ்நாள் முழுவதும் நான் இந்த வகையை செர்ந்தவனாகவே இருக்க விரும்புகின்றேன்.)

2.       பண்டிதர்கள்: இவர்கள் அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நிலையை அடைந்தவர்கள். கற்றுக்கொள்ளும் நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு promotion பெற்றவர்கள். அறிவுரை கூறுபவர்கள். நம் வீட்டு பெரியவர்கள் போல் சற்று பழமைவாதம் பேசக்கூடியவர்கள். ஆனால் சாதனையாளர்கள்.

3.       பண்டித மாணவர்கள்: இது ஒரு உயர்ந்த நிலை. இவர்கள் பண்டிதர்களுக்கு இணையானவர்கள் ஆனால் மாணவத் தன்மையை இழக்காத்தவர்கள். கற்றுகொள்ளும் திறன் தங்களை விட்டு போகாது தக்கவைத்துகொள்பவர்கள். கடின உழைப்பும், புத்தி கூர்மையும் மட்டுமின்றி எப்பொழுதும் updatedஆக இருப்பார்கள். புது புது முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இந்த வகையை சேர்ந்தவர்கள்  சரித்திரத்தில் முக்கியமான இடம் பிடிப்பார்கள்.

4.       மாணவ பண்டிதர்கள்: மாணவ நிலையில் இருக்கும்போழுதே தங்களை பண்டிதர்கள் என்று என்னிக் கொண்டிருப்பவர்கள். உலகில் அனைவருமே அறிவில் தங்களுக்கு கீழ் நிலையிலிருப்பவர்கள் என்று நினைப்பவர்கள். இவர்களிடம் வெட்டி ஜம்பம் அதிகமிருக்கும். அனைத்து விஷயங்களும் தங்களுக்கு தெரியுமென்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள். அடிக்கடி வெட்டி விவாதத்தில் ஈடுபடுபவர்கள். நான் பறந்த ஹெலிகாப்டருக்கு ஏழு வால் என்பவர்கள். இவர்களிடம் விவாதிப்பதை விட பழனி அடிவாரத்தில் போய் விபூதி விற்கலாம்.இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகம். எந்த மூலையிலும் இவர்களை காணலாம். 

மாணவ நிலையிலிருக்கும் எனக்கு பண்டிதர்களிடமிருந்தும், பண்டித மாணவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. ஆதலால் இவர்களிடம் பணிவாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இந்த மாணவ பண்டிதர்களை கண்டாலே உஷ்ணமாகி, ரட்சகன் நாகர்ஜுன போல் நரம்பு புடைகிறது. பின் BP Tablet போட்டு அடக்க வேண்டியிருக்கிறது. கடவுளென்று ஒருவன் இருக்கிறான் என்றால் அவரிடம் நான் வேண்டிக்கொள்வது கடவுளே என்னை இந்த மாணவப் பண்டிதப் பயகளிடமிருந்து காப்பாற்று."

Sunday, November 4, 2012

அட்டகத்தி & Pizza - விமர்சனம்

 இரண்டு புதிய இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்தேன். 1.அட்டகத்தி 2. Pizza. இரண்டையும், ஒன்றன் பின் ஒன்றாக சற்று சுருக்கமாக விவரிக்கிறேன். ஏன்  சுருக்கமான்னு யோசிக்கிறது புரியிது. மொக்கை படங்களாக இருந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக கிழித்து கேப்பயை நட்டிருக்கலாம், ஆனால் இவை இரண்டும் நல்ல படங்கள் அதனால் அனைவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டுமென்பது அடியேனின் ஆசை.   இரண்டு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு

1. தயாரிப்பாளர் C. V. Kumar's Thirukumaran Entertainments
2. இசை: சந்தோஷ் நாராயணன்
3.  படத்தொகுப்பு: Leo John Paul

யார் இன்னா பண்ணா நமக்கு இன்னாபா? படம் நல்லார்ந்த சர்தான்பா  என்பவர்களுக்கு, நேரா Matterக்கு போவோம் நைனா!
அட்டகத்தி:
சென்னை அருகே உள்ள கிராமத்தை பூர்வகுடியாக கொண்ட ஒரு கீழ்தட்டு குடும்பத்தில் பிறந்த தீனா என்னும் இளைஞன் அட்டகத்தியாக இருந்து ரூட்டுதலை ஆவது தான் கதை. கதை, கேட்க ரொம்ப சுமாராக இருந்தாலும், சென்னை மற்றும் சுற்றுப்புற வாழ் மனிதர்களை பிழையாகவே சித்தரித்து வந்த தமிழ் சினிமாவிற்கு கதைகளம் & பாத்திர படைப்பு ரொம்பவே  Fresh. Screenplay & Direction  are detailed & in-depth. Protagonist தினேஷிடம்,  இந்த படத்திற்கு தேவையான  நடிப்பை வாங்கிர்யிருப்பதில் இருந்தே  இந்த கதையில் இயக்குனர் ரஞ்சித் வெகு காலம் பயணித்திருப்பது நன்றாக தெரிகிறது. எந்த பில்ட் அப்பும் இல்லாமல் வந்து வெற்றி பெற்றுள்ள அட்டகத்தி சென்னை சென்னை பூர்வக்குடி மக்களின், குடும்பத்தின், பெண்களின், ஆண்களின்,  இளைஞர்களின் இயல்பு மீறாத பதிவு. Whiskyயை Neatஆகவோ, சோடா தண்ணீர் கலந்தோ அடிப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். Seven Up, Sprite கலந்து அடிப்பவர்கள் இந்த படத்தை பார்க்க தேவையில்லை.

Directed by:Pa. Ranjith ( சிறப்பு )
Produced by:C.V.Kumar's Thirukumaran Entertainments ( நல்ல படம் எடுக்கும் தயாரிப்பாளர் ஒரு நல்ல படைப்பாளி)
Screenplay by:Pa. Ranjith ( நன்று )
Story by:Pa. Ranjith (நன்று)
Starring:Dinesh, Nandita, Aishwarya (சிறப்பு)
Music by:Santhosh Narayan (சிறப்பு)
Cinematography:P. K. Varma (சிறப்பு)
Editing by:Leo John Paul (சிறப்பு)
Distributed by:Studio Green (Promoted Well)

Pizza:
Metro City  சென்னையில் ஒரு pizza shopல் வேலை பார்க்கும் மைகேல்  மற்றும் அவனுடைய  living together girl friend அணு ஆகியோரின் வாழ்கையில் வீசும் சிறிய சூறாவளி அவர்கள் வாழ்கையை புரட்டிபோடும் சுவாரசியத்தை, த்ரில்லிங்காக தீட்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இதற்க்கு மேல் இந்த படத்தின் கதையை விவாதித்தால் படம் பார்க்க சுவாரஸ்யம் குறைந்து விடும். தமிழ் நாட்டு இளைஞர்களை இனியும் அட்டு காதலிகளின் பின்னால் அலைந்து, காதல் தோல்வியால் கனத்த இதயத்தோடு இருவது வருடம் வாழும் கல்லூரி மாணவனாக காட்ட முடியாது, இன்றைய இளைஞர்களை நிதர்சனத்தோடு நிழலாட விட்டிருக்கிறார்.  It's a short and sharp movie, better to avoid kids. Kaarthik Subbaraj is gonna  rock the industry.

Directed by:Karthik Subbaraj ( சிறப்பு)
Produced by:C. V. Kumar's Thirukumaran Entertainments (டபுள் சிறப்பு)
Screenplay by:Karthik Subbaraj (சிறப்பு)
Story by:Karthik Subbaraj (நன்று)
Starring:Vijay Sethupathi,Remya Nambeesan (சிறப்பு)
Music by:Santhosh Narayanan (சிறப்பு)
Cinematography:Gopi Amarnath (சிறப்பு)
Editing by:Leo John Paul (சிறப்பு)

மொத்தத்தில் Worth Watching both the Movies!

நன்றி:
பாமரத்தமிழன்

Sunday, September 30, 2012

தாண்டவம் விமர்சனம் (Thaandavam Movie Review)



சமீப காலமாக விக்ரம் அவர்களின் கதை தேர்வில் சற்றும் நம்பிக்கையிழந்த என்னை போன்ற அவரது ரசிகர்களுக்கு, தெய்வத்திருமகன் மூலம் நம்பிக்கை ஊட்டியவர்  இயக்குனர் விஜய். இவர்கள் கூட்டணியில் இரண்டாவது படம் என்பதால் நம்பிக்கையிலும், இயக்குனர் விஜயின் முதல் "action" படம் என்பதால்  மிகுந்த எதிர்பார்ப்பிலும் theatreக்கு சென்றேன்.  அந்த எதிர்பார்ப்பில் சிறப்பாக செம்மண்ணை வாரி தூவியிருக்கிறார் விஜய்.

படத்தின் முதல்பாதி: லண்டன் நகரிலும் சுற்றுப்புறத்திலும், ஒரு Churchல் பியானோ வாசிக்கும் கண் தெரியாத விக்ரம் இரண்டு மூன்று பேரை மட்டை பண்ணுகிறார். எதேட்சையாக அவரை taxiயில் ஒவ்வொரு கொலை கலத்திற்கும் அழைத்துசெல்லும் taxi டிரைவர் சந்தானம், அதை துப்பறிய வரும் உட்டாலக்கடி officer நாசரின் விசாரணை வட்டத்திற்குள் சிக்குகிறார் (காமடியாமா, கருமம் புடிச்சவனுங்க).  இதன் நடுவே Miss. London எமி ஜாக்சன்,  மிஸ் UK ஆகும் லட்சியத்தில் விக்ரமுடன் நட்பு ஏற்பட்டு, நட்பு காதலாகிறது. மட்டமான திரைகதை, மட்டமான காட்சியமைப்பு, சுமாரான் பாடல்கள், பாடல் படமாக்கியவிதம் என்று முதல்பாதி theatreய் விட்டு கிளம்ப தூண்டுகிறது. சந்தானத்தின் commedyயை விட நாசரின் பாத்திரபடைப்பு நல்ல commedy. "அழகிப்போட்டிக்கி அழகும், அறிவும் மட்டும் போதாது, கொஞ்சம் திருட்டு தனம் வேணும், I mean social interest" போன்ற அதிபுத்திசாலிதனமான வசனங்கள் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதி: விக்ரம் ஒரு ராவான RAW officer, அவரது நண்பர் ஜகபதி பாபு இன்னொரு RAW officer. கோயான் மோயான்பட்டியில் சீயான் விக்ரமிற்கு கல்யாண ஏற்பாடு.  இவருக்கு தெரியாமலேயே, பெண் பார்த்து கல்யாண பத்திரிக்கை அடித்து இவருக்கே அனுப்பி வைக்கும் ஒரு மானம் கெட்ட அம்மா. பையனை பற்றி ஒரு விவரமும் தெரியாமல் கல்யாணத்திற்கு கிளம்பி வந்து கட்டையை குடுக்கும்,  கேடுகெட்ட கண் டாக்டர் அனுஷ்கா என்று நகர்ந்தாலும், அனுஷ்காவின் அழகிலும், நிரவ் ஷாவின்  ஒளிப்பதிவாலும், இரண்டாம் பாதியில் சற்று சாய்ந்து உட்கார முடிகிறது. இது இரண்டையும் தவிர படத்தில் ரசிப்பதற்கு வேறு  எதுவும் இல்லை.  RAW officers என்று ராவாக ராவடி பண்ணிக்கொண்டு திரியும் இவர்களின் சில்லறை தனத்தை பார்த்து நகைச்சுவை கூட ஏற்படவில்லை, மாறாக மாரடைப்பு வந்த இருவரை ஆம்புலன்சில் அள்ளி போனார்கள். அவ்வளவு பாத்திரப்படைப்பும், காட்சியமைப்பும் நம்மை வாட்டி வதைக்கிறது.  இந்தியா தயாரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த குல்பி குண்டு, அதற்க்கு ஒரு flow chart (இன்னாமே இது, ஒன்னிமே பிரியிலே) அதை உஷார் பண்ணி courierல் அனுப்பும் பிரிட்டிஷ் பெள்ளக்காய் பிஸ்துகள், என்று சற்றும் யோசிக்காமல் சிலிர்க்க வைக்கிறார் இயக்குனர். இந்த பார்சலை தேடி போய் அந்நியர்களிடம் அகப்பட்டு கொள்ளும் விக்ரம். பின் இது எல்லாத்துக்கும் காரணம் இவரது நண்பன் ஜகபதி பாபு என்று தெரிந்து தாண்டவம் ஆட தயாராகும் முன், குண்டு வெடிப்பில் சிக்கி அனுஷ்கா இறக்க, விக்ரம் கண் பறிபோக, முடிகிறது flashback. அப்பறம் எதுக்கு  வெயிட்டிங்கி.... எதிரியான நண்பனை கொள்வதோடு சிரிப்பு போலீஸ் நாசரிடம் சரணடையும் விக்ரமை, எங்கள் நாட்டில் களையெடுக்க வந்த கடவுளென்று கையெடுத்து கும்பிட்டு விடுதலை செய்கிறது லண்டன் "சிறப்பு" நீதிமன்றம் (பாவம் அவங்களே கன்பீஸ் ஆய்டாங்க  போல).  தன் மனைவி அனுஷ்கா நினைவாக விக்ரம் வாழ, விக்ரம் நினைவாக காதலி எமி ஜாக்சன் பின்தொடர, முடிகிறது ஒரு முரட்டு மொக்கை திரைப்படம். யப்பா போதுண்டா சாமி, இனிமே உங்க படத்துக்கு வந்தா என்ன நிக்க வச்சி கேள்வி கேளுங்கடா.

உண்மையாகவே படத்தில் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு மட்டுமே மன நிறைவை தருகிறது. லண்டன் நகரின் அழகை மேலும்  மெருகேற்றி இருக்கிறார். அனுஷ்காவின் நடிப்பு சிறப்பு. வழக்கம் போல விக்ரமின் உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக எமி ஜாக்சன் நடிக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும். சந்தானம் தன் Call Sheetடை இப்படி வேஸ்ட் பண்ணுவது கடும் கண்டனத்திற்குரியது.

நன்றி,
பாமர தமிழன்    

Sunday, August 12, 2012

ஞாயிறு மாலை

இரண்டாவது மாடி மாடத்திலிருந்து பார்த்தேன், என் தெரு முழுவதும் என்னால் பார்க்க முடிந்தது. தினமும் பார்க்கும் தெருதான் என்றாலும் இன்று எங்கும் மனிதர்களை காண முடியவில்லை.  மனிதர்கள் மட்டுமல்ல தெருவில் துள்ளி விளையாடும் ஒரு சில நாய்கள் கூட இன்றில்லை. வீடுகளுக்குள் மனிதர்கள் பேசும் சத்தம் கூட கேட்கமுடியவில்லை, தொலைகாட்சிகளில் இருந்து வரும் ஓசை தான் கேட்கிறது. பொதுவாகவே எல்லா ஞாயிற்று கிழமைகளின் மாலைகளில் இப்படிதான் தெருக்கள் காணபடுகிறது. ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்கள் ஓய்வின் உச்சதிலிருக்கின்றன, இனி ஐந்தாறு நாட்கள் ஓய்வின்றி உழைக்கவேண்டிய கட்டாயம் அவைகளின் உறக்கத்தில் புரிகிறது.  வார விடுமுறை முடிந்துவிட்டத்தின் சோகம் என் மனதில்மட்டுமல்ல, என் தெரு மனிதர்கள் மனதிலும் பாரமாய் இருப்பதை இந்த காட்சி உணர்த்துகிறது.

Monday, August 6, 2012

கவித கவித

வன்முறை:

என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான், நான் நிலை குலைந்தேன்!
என் மனைவியை எட்டி மிதித்துத் தள்ளினான், அவள் தடுமாறிக் கிடந்தாள்!
பின் பொருட்களை உடைத்து நொறுக்கினான், நான் வெகுண்டெழுந்தேன்...
என் மனைவி விபரீதம் அறிந்து என்னைத் தடுத்தாள்!
அவன் எங்களைப் பார்த்து சிரித்தான், பின் "அப்பா உக்காரு" என்றான் அவனுக்கு தெரிந்த தமிழில்.
நான் மூடிக்கொண்டு உக்காந்து விட்டேன், வேறு என்ன செய்வது?



க்ராதகன்:

விஜய் சிக்குலெட்டு சிட்டு குருவி பாடும் நேரம்,
ஆரியா ஆய்லே ஆய்லே பாடும் நேரம்,  
நரேன் மாம்பலம் விக்கிற கண்ணம்மாவை அழைக்கும் நேரம்,
அனுராக் காஷ்யாப் காஸ்டிங் பண்ண ஆள் தேடிகொண்டிருந்த நேரம்,
நான் Facebookல் உலாவிக்கொண்டிருந்தேன்,
இவை எதையுமே சட்டை செய்யாமல் faireverய் பிதுக்கி தரையில் பூசிகொண்டிருக்கிறான் ஒரு க்ராதகன்.....
 

Wednesday, March 21, 2012

விழித்திடு தமிழா, வெகுண்டெழு!





















தமிழக அரசியல் எவ்வளவு இழிவாக உள்ளது என்பதற்கு சட்ட சபையில் நேற்று நடந்த சம்பவமே சான்று. இலங்கைக்கு எதிரான ஐநா சபையின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று திமுகவும், ஆதிமுகாவும் வலியுறுத்துவது  போல வெளியில் காட்டி கொண்டுவிட்டு, உள்ளுக்குள் அவர்களின் அரசியல் பலத்தை நிரூபிக்க இரு கட்சிகளும் போட்டா போட்டி போட்டு தமிழக மானத்தை கப்பல் ஏற்றிய நிகழ்ச்சியே மீண்டும் சட்டசபையில் நடந்திருக்கிறது.

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையும், இலங்கை மீனவர்களும் கொன்று அழித்ததற்கு எதிராக தமிழக கட்சிகள் ஒற்றுமையுடன் போராடி இருந்தால் பல உயிர்கள் காக்கபட்டிருக்கும். கேரளத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களை இத்தாலிய கப்பலில் இருந்த காவலர்கள் சுட்டு வீழ்தியதர்க்காக, அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் மண்டியிட வைத்து கடமையை எப்படி செய்யவேண்டுமென்று கேரள அரசு தமிழகத்திற்கு பாடம் கற்பித்திருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்திலும், திமுகவும், ஆதிமுகவும் அவர் அவர் நிலையாய் நிலையை தெளிவுபடுத்தாமல் ஒருவரின் நிலையை மற்றவர் அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள். காரணம், எதிர் கட்சியின் நிலைக்கு எதிராக கருத்து கூறி போரட்டங்களில் இறங்கி தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக. கடைசியாய் இரு கட்சிகளும் ஒரே பக்கமாக, அதாவது மக்களை அழிக்கும் பக்கத்தில் சாய்ந்திருப்பது தமிழக மக்கள் மீது பரிதாபாத்தை ஏற்படுத்துகிறது.

இதே போல் காவிரி நீர், முல்லை பெரியாறு அணை போன்ற தமிழகத்திற்கு தேவையான அணைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும், இத்தனை ஆண்டுகாலம் ஓட்டு போட்டு ஆட்சி புரிய வாய்ப்பளித்த மக்களை மனதில் வைத்து, இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி இருந்தால் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறியிருக்கும். இலங்கை பிரச்சினையில் தமிழர்களை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது, முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரளா வஞ்சிக்கிறது, காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகம் நம்மை வஞ்சித்து விட்டது என்று புலம்பும் நம் மக்களை உண்மையில் வஞ்சித்துகொண்டிருப்பது யார்?  இந்த இரண்டு கட்சிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அணைத்து முன்னணி கட்சிகளும், உண்மையான உணர்விருந்தால் தங்கள் கட்சி கொள்கை, சொந்த விரோதம், குடும்ப சண்டை, சாதி மத அரசியல் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்று கூடி போராடியிருந்தால் நம் மீனவர்கள் இத்தனை பேரை இழந்திருப்போமா? நம் அடிப்படை உரிமைகளை இழந்திருப்போமா? ஈழத்தில் இத்தனை தமிழர்களை பலி கொடுத்திருப்போமா? அனால் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் என்றும் வரப்போவது இல்லை.

இனியும் நம் அரசியல்வாதிகளை நம்பி, நாம் இப்படியே தூங்கிகொண்டிருந்தோமேயானால், நம்மை யார்தான் காப்பது? அரசியல், சாதி, மதம் அல்லாத அடையாளம் நமக்கிருக்கிறது, அது தான் தமிழன் என்ற அடையாளம். இனியேனும் நாம் விழித்து, வெகுண்டெழுந்து அரசியல் கட்சிகளை புறக்கணித்து, மக்களை ஒன்றுபடுத்தி, தமிழ் மக்கள் இயக்கமாக செயல்பட்டு ஒன்றுகூடி போராடினாலே ஒழிய நம் அடிப்படை உரிமைகளைகூட நாம் பெற முடியாது.

வெகுண்டேழுவோமா?