Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, August 6, 2012

கவித கவித

வன்முறை:

என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான், நான் நிலை குலைந்தேன்!
என் மனைவியை எட்டி மிதித்துத் தள்ளினான், அவள் தடுமாறிக் கிடந்தாள்!
பின் பொருட்களை உடைத்து நொறுக்கினான், நான் வெகுண்டெழுந்தேன்...
என் மனைவி விபரீதம் அறிந்து என்னைத் தடுத்தாள்!
அவன் எங்களைப் பார்த்து சிரித்தான், பின் "அப்பா உக்காரு" என்றான் அவனுக்கு தெரிந்த தமிழில்.
நான் மூடிக்கொண்டு உக்காந்து விட்டேன், வேறு என்ன செய்வது?



க்ராதகன்:

விஜய் சிக்குலெட்டு சிட்டு குருவி பாடும் நேரம்,
ஆரியா ஆய்லே ஆய்லே பாடும் நேரம்,  
நரேன் மாம்பலம் விக்கிற கண்ணம்மாவை அழைக்கும் நேரம்,
அனுராக் காஷ்யாப் காஸ்டிங் பண்ண ஆள் தேடிகொண்டிருந்த நேரம்,
நான் Facebookல் உலாவிக்கொண்டிருந்தேன்,
இவை எதையுமே சட்டை செய்யாமல் faireverய் பிதுக்கி தரையில் பூசிகொண்டிருக்கிறான் ஒரு க்ராதகன்.....
 

Wednesday, December 21, 2011

இன்னும் எத்தனை?

ஐந்து வருடங்கள் விளையாடினோம்...
18 வருடங்கள் படித்தோம்,
பணிசெய்கிறோம், இன்னும் எத்தனை வருடங்கள்?

தாய், தந்தை..
அண்ணன், தம்பி...
அக்காள், தங்கை...
மனைவி, குழந்தை...
இன்னும் எத்தனை உறவுகள்?

நாட்கள் பறக்கின்றன...
மாதங்கள் கடக்கின்றன...
வருடங்கள் நகர்கின்றன...
இன்னும் எத்தனை காலம்?