Sunday, August 12, 2012

ஞாயிறு மாலை

இரண்டாவது மாடி மாடத்திலிருந்து பார்த்தேன், என் தெரு முழுவதும் என்னால் பார்க்க முடிந்தது. தினமும் பார்க்கும் தெருதான் என்றாலும் இன்று எங்கும் மனிதர்களை காண முடியவில்லை.  மனிதர்கள் மட்டுமல்ல தெருவில் துள்ளி விளையாடும் ஒரு சில நாய்கள் கூட இன்றில்லை. வீடுகளுக்குள் மனிதர்கள் பேசும் சத்தம் கூட கேட்கமுடியவில்லை, தொலைகாட்சிகளில் இருந்து வரும் ஓசை தான் கேட்கிறது. பொதுவாகவே எல்லா ஞாயிற்று கிழமைகளின் மாலைகளில் இப்படிதான் தெருக்கள் காணபடுகிறது. ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்கள் ஓய்வின் உச்சதிலிருக்கின்றன, இனி ஐந்தாறு நாட்கள் ஓய்வின்றி உழைக்கவேண்டிய கட்டாயம் அவைகளின் உறக்கத்தில் புரிகிறது.  வார விடுமுறை முடிந்துவிட்டத்தின் சோகம் என் மனதில்மட்டுமல்ல, என் தெரு மனிதர்கள் மனதிலும் பாரமாய் இருப்பதை இந்த காட்சி உணர்த்துகிறது.

Monday, August 6, 2012

கவித கவித

வன்முறை:

என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான், நான் நிலை குலைந்தேன்!
என் மனைவியை எட்டி மிதித்துத் தள்ளினான், அவள் தடுமாறிக் கிடந்தாள்!
பின் பொருட்களை உடைத்து நொறுக்கினான், நான் வெகுண்டெழுந்தேன்...
என் மனைவி விபரீதம் அறிந்து என்னைத் தடுத்தாள்!
அவன் எங்களைப் பார்த்து சிரித்தான், பின் "அப்பா உக்காரு" என்றான் அவனுக்கு தெரிந்த தமிழில்.
நான் மூடிக்கொண்டு உக்காந்து விட்டேன், வேறு என்ன செய்வது?



க்ராதகன்:

விஜய் சிக்குலெட்டு சிட்டு குருவி பாடும் நேரம்,
ஆரியா ஆய்லே ஆய்லே பாடும் நேரம்,  
நரேன் மாம்பலம் விக்கிற கண்ணம்மாவை அழைக்கும் நேரம்,
அனுராக் காஷ்யாப் காஸ்டிங் பண்ண ஆள் தேடிகொண்டிருந்த நேரம்,
நான் Facebookல் உலாவிக்கொண்டிருந்தேன்,
இவை எதையுமே சட்டை செய்யாமல் faireverய் பிதுக்கி தரையில் பூசிகொண்டிருக்கிறான் ஒரு க்ராதகன்.....