Monday, August 11, 2008

அபினவ் பிந்த்ரா - ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியன்.


பெய்ஜிங்கில் நடை பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் சண்டிகார் நகரை சேர்ந்த 25 வயதாகும் அபினவ் பிந்த்ரா 10 m Air Rifle பிரிவு போட்டியில் தங்கம் வென்று, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் தங்கம் வென்ற முதல் இந்தியன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 28 வருடங்களில் இந்தியா ஒலிம்பிக்கில் பெரும் முதல் தங்க பதக்கமாகும். 1980ம் வருடம் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியினர் வென்றதே இதற்கு முந்தைய தங்க பதக்கமாகும்.

இவர் ஒரு M.B.A பட்டதாரி ஆவார், மேலும் இவர் அபினவ் ஃபியூசரிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் CEO ஆவார்.

அபினவ் பிந்த்ராவால் இந்தியாவிற்கும் அவரது பெற்றோருக்கும் பெரும் பெருமை சேர்ந்துள்ளது.

sources:
http://en.wikipedia.org/wiki/Abhinav_Bindra
http://www.ibnlive.com/olympicsnews/abhinav-bindra-wins-olympic-gold/70827-29.html

Friday, August 8, 2008

மின் அஞ்சல் கடி

நண்பன் அனுப்பிய மின் அஞ்சல் கடி ஜோக்குகள்.


விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா? -----------------------------------------------------------

சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
--------------------------------------------------------------------
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்

-------------------------------------------------------------------------
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!


ஆனா,


பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!

கொஞ்சம் யோசிங்க!!!


- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்

-----------------------------------------------------------------------------------

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
------------------------------------------------------------------------------------

ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.


ஆனா


Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
-------------------------------------------------------------------------------------

வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.

ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!


1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1


தெரிஞ்சுகிட்டியா?
-------------------------------------------------------------------------------------

பாரதி : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

வினோத் : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
-------------------------------------------------------------------------------------
நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்

என் இதய துடிப்பு அதிகரிக்கிறது

ஆயிரம் மடங்கு!

ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா

அப்படிதான் ஆகும்.
---------------------------------------------------------------------

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

கவுண்டமணி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
--------------------------------------------------------------------------------

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ...........
------------------------------------------------------------------------------------

தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க

அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க

காசு இருந்தா கால் பண்ணுங்க

எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!
--------------------------------------------------

நன்றி
பாமர தமிழன்