இரண்டாவது மாடி மாடத்திலிருந்து பார்த்தேன், என் தெரு முழுவதும் என்னால்
பார்க்க முடிந்தது. தினமும் பார்க்கும் தெருதான் என்றாலும் இன்று எங்கும்
மனிதர்களை காண முடியவில்லை. மனிதர்கள் மட்டுமல்ல தெருவில் துள்ளி
விளையாடும் ஒரு சில நாய்கள் கூட இன்றில்லை. வீடுகளுக்குள் மனிதர்கள் பேசும்
சத்தம் கூட கேட்கமுடியவில்லை, தொலைகாட்சிகளில் இருந்து வரும் ஓசை தான்
கேட்கிறது. பொதுவாகவே எல்லா ஞாயிற்று கிழமைகளின் மாலைகளில் இப்படிதான்
தெருக்கள் காணபடுகிறது. ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்கள்
ஓய்வின் உச்சதிலிருக்கின்றன,
இனி ஐந்தாறு நாட்கள் ஓய்வின்றி உழைக்கவேண்டிய கட்டாயம் அவைகளின்
உறக்கத்தில் புரிகிறது. வார விடுமுறை முடிந்துவிட்டத்தின் சோகம் என்
மனதில்மட்டுமல்ல, என் தெரு மனிதர்கள் மனதிலும் பாரமாய் இருப்பதை இந்த காட்சி
உணர்த்துகிறது.
No comments:
Post a Comment