கவுண்டர்: (கீத்து கொட்டகை மெக்கானிக் ஷாப்பில் கையில் 4x2 ஸ்பானர் வைத்து கொண்டு ஒரு ஓட்டை மோட்டரை ரிப்பேர் செய்வதுபோல் பாவலா பண்ணிக்கொண்டு) ஹே நின்னுகோரி வர்ணம், ஹே ஹே உக்காந்துகோடி வர்ணம், ஹே படுத்துகோடி வர்ணம்.
செந்தில்: (கையில் கடலை உருண்டையை வைத்து கரண்டி கொண்டு வருகிறார்): ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லே!!!
கவுண்டர்: யார்டா அவன் என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவன்.
செந்தில்: அது நான் தான்னே!
கவுண்டர்: நீ ராசாவா? அடுப்புல வெச்சி கருக்குன மாறி ஒரு கையி... அத நீ வெக்க வேற செய்வியா?. படுவா பிச்சுபுடுவேன்.
செந்தில்: சும்மா வேலாடதீங்கன்னேன். இன்னக்கி எப்பன்னே நல்ல நேரம்?
கவுண்டர்: நீ வந்துடீல நாயே, இனிமே கெட்டநேரம் தான் நல்லநேரமே கெடயாது. அமா அப்புடி என்ன நல்ல காரியம் பண்ண போறே நாயே நீ?
செந்தில்: அண்ணி காலைல கோழி வாங்குறத பாத்தேன், அதான் நல்ல நேரத்துல சாப்ட போகலாம்னு....
கவுண்டர்: டேய் சிவகுமார் தலையா, நானே காலைல இருந்து இந்த மோட்டார் எப்புடி ரிப்பேர் பண்றதுன்னு தெரியாம ஒரே kanfuse ஆகிபோய் இருக்கேன், என்ன டென்ஷன் பண்ணாதே ஓடி போயிரு.
செந்தில்: லெஸ் டென்ஷன் மோர் வொர்க், மோர் டென்ஷன் லெஸ் வொர்க். be கூல்
கவுண்டர்: இன்னொரு தடவ இங்கிலீஷ் பேசுனே... மவனே மோட்டர on பண்ணி, உன் தலைய உள்ள விட்டுருவேன் படுவா. மூஞ்சிய பாரு ஏழாம் அறிவு சூர்யா மாதிரி, பரதேசி நாயி.
செந்தில்: ஹா ஹா ஹா ஹா
கவுண்டர்: இப்ப எதுக்கு நாயே பம்பரத்த தின்ன பண்ணி மாறி சிரிக்கிறே?
செந்தில்: உலகத்த நெனச்சேன் சிரிச்சேன்!
கவுண்டர்: அப்புடி என்ன நடந்திருச்சி இந்த உலகத்துல?
செந்தில்: ஸ்பானர் எடுத்தவன்லாம் மெக்கானிக்ங்கறானுங்க!
கவுண்டர்: காலைல எந்திரிச்சதுலருந்து, நைட் தூங்குரவரைக்கும், ஓசில எங்க வாங்கி திங்கலாம்னு அலையிற நாயி நீ.... உனக்கு, நக்கல், நய்யாண்டி, இதுல கருத்து வேற பேசுர. இனிமே கருத்து பேசுவே..பேசுவே... கம்முனாட்டி.....(என்று ரெண்டு மிதி மிதித்து) ஆமா.... அது என்ன நாயே கையிலே?
செந்தில்: பாத்தா தெரியல, கடலை உருண்ட (என்று அழுது கொண்டே சொல்ல)
கவுண்டர்: ஓஹ இதான் கடலை உரோண்டயா, நான் பாத்ததே இல்லே. எங்க குடு பாப்போம்.
செந்தில்: குடுக்க மாட்டேனே! குடுத்தா நீங்க தூக்கி போட்டுருவீங்களே
கவுண்டர்: குடுக்கலனாலும் நான் புடுகி தூக்கி போடுவேனே...... அப்பறம் உன் வாயிலேயே மிதிப்பேனே......
கவுண்டர்: (ஷ்ஹூ என்ன... பண்ணி black மெயில் பண்ணுது. சரி சமாளிப்போம்). டேய் ராசா உன்ன போய் நான் அடிப்பேனாடா. நீ வருவேன்னு உனக்காக, வேர்கடலையும் தேங்கா பார்பியும் வாங்கி வெச்சிருக்கேன், வா ராசா வா! ஆமா அந்த 3வது தெரு ராசாத்தி என்ன சொன்னா?
செந்தில்: நீங்க ரொம்ப புத்திசாலின்னேன்.
கவுண்டர்: உனக்கு தெரியிது இந்த உலகத்துக்கு தெரிய மாட்டேங்குதே. இதெல்லாம் நீ ஊருக்குள்ள போய் சொல்லணும் டா . அண்ணேன் ஒரு நல்லவர், வல்லவர் bend எடுக்கரதல... ஒரு சிறந்தவர் ன்னு... முக்கியமா அந்த 3வது தெரு ராசாத்தி அக்கா கிட்ட போய் சொல்லணும். ஆமா அவ என்ன சொன்னா?
செந்தில்: அந்த வேர் கடலை....
கவுண்டர்: எது?
செந்தில்: அந்த தேங்கா பர்பி
கவுண்டர்: டேய்.... என்ன டென்ஷன் பண்ணாதே... சொல்லிரு
செந்தில்: இந்தா அண்ணி வந்துட்டாங்க அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க ( என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுக்க)
பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்த கவுண்டரின் மனைவி கையில் உலக்கையுடன் வந்து, கீத்து கொட்டகை கிழிய கிழிய கவுண்டரை துவைத்து எடுக்கிறார்.....
No comments:
Post a Comment