Sunday, September 30, 2012

தாண்டவம் விமர்சனம் (Thaandavam Movie Review)



சமீப காலமாக விக்ரம் அவர்களின் கதை தேர்வில் சற்றும் நம்பிக்கையிழந்த என்னை போன்ற அவரது ரசிகர்களுக்கு, தெய்வத்திருமகன் மூலம் நம்பிக்கை ஊட்டியவர்  இயக்குனர் விஜய். இவர்கள் கூட்டணியில் இரண்டாவது படம் என்பதால் நம்பிக்கையிலும், இயக்குனர் விஜயின் முதல் "action" படம் என்பதால்  மிகுந்த எதிர்பார்ப்பிலும் theatreக்கு சென்றேன்.  அந்த எதிர்பார்ப்பில் சிறப்பாக செம்மண்ணை வாரி தூவியிருக்கிறார் விஜய்.

படத்தின் முதல்பாதி: லண்டன் நகரிலும் சுற்றுப்புறத்திலும், ஒரு Churchல் பியானோ வாசிக்கும் கண் தெரியாத விக்ரம் இரண்டு மூன்று பேரை மட்டை பண்ணுகிறார். எதேட்சையாக அவரை taxiயில் ஒவ்வொரு கொலை கலத்திற்கும் அழைத்துசெல்லும் taxi டிரைவர் சந்தானம், அதை துப்பறிய வரும் உட்டாலக்கடி officer நாசரின் விசாரணை வட்டத்திற்குள் சிக்குகிறார் (காமடியாமா, கருமம் புடிச்சவனுங்க).  இதன் நடுவே Miss. London எமி ஜாக்சன்,  மிஸ் UK ஆகும் லட்சியத்தில் விக்ரமுடன் நட்பு ஏற்பட்டு, நட்பு காதலாகிறது. மட்டமான திரைகதை, மட்டமான காட்சியமைப்பு, சுமாரான் பாடல்கள், பாடல் படமாக்கியவிதம் என்று முதல்பாதி theatreய் விட்டு கிளம்ப தூண்டுகிறது. சந்தானத்தின் commedyயை விட நாசரின் பாத்திரபடைப்பு நல்ல commedy. "அழகிப்போட்டிக்கி அழகும், அறிவும் மட்டும் போதாது, கொஞ்சம் திருட்டு தனம் வேணும், I mean social interest" போன்ற அதிபுத்திசாலிதனமான வசனங்கள் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதி: விக்ரம் ஒரு ராவான RAW officer, அவரது நண்பர் ஜகபதி பாபு இன்னொரு RAW officer. கோயான் மோயான்பட்டியில் சீயான் விக்ரமிற்கு கல்யாண ஏற்பாடு.  இவருக்கு தெரியாமலேயே, பெண் பார்த்து கல்யாண பத்திரிக்கை அடித்து இவருக்கே அனுப்பி வைக்கும் ஒரு மானம் கெட்ட அம்மா. பையனை பற்றி ஒரு விவரமும் தெரியாமல் கல்யாணத்திற்கு கிளம்பி வந்து கட்டையை குடுக்கும்,  கேடுகெட்ட கண் டாக்டர் அனுஷ்கா என்று நகர்ந்தாலும், அனுஷ்காவின் அழகிலும், நிரவ் ஷாவின்  ஒளிப்பதிவாலும், இரண்டாம் பாதியில் சற்று சாய்ந்து உட்கார முடிகிறது. இது இரண்டையும் தவிர படத்தில் ரசிப்பதற்கு வேறு  எதுவும் இல்லை.  RAW officers என்று ராவாக ராவடி பண்ணிக்கொண்டு திரியும் இவர்களின் சில்லறை தனத்தை பார்த்து நகைச்சுவை கூட ஏற்படவில்லை, மாறாக மாரடைப்பு வந்த இருவரை ஆம்புலன்சில் அள்ளி போனார்கள். அவ்வளவு பாத்திரப்படைப்பும், காட்சியமைப்பும் நம்மை வாட்டி வதைக்கிறது.  இந்தியா தயாரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த குல்பி குண்டு, அதற்க்கு ஒரு flow chart (இன்னாமே இது, ஒன்னிமே பிரியிலே) அதை உஷார் பண்ணி courierல் அனுப்பும் பிரிட்டிஷ் பெள்ளக்காய் பிஸ்துகள், என்று சற்றும் யோசிக்காமல் சிலிர்க்க வைக்கிறார் இயக்குனர். இந்த பார்சலை தேடி போய் அந்நியர்களிடம் அகப்பட்டு கொள்ளும் விக்ரம். பின் இது எல்லாத்துக்கும் காரணம் இவரது நண்பன் ஜகபதி பாபு என்று தெரிந்து தாண்டவம் ஆட தயாராகும் முன், குண்டு வெடிப்பில் சிக்கி அனுஷ்கா இறக்க, விக்ரம் கண் பறிபோக, முடிகிறது flashback. அப்பறம் எதுக்கு  வெயிட்டிங்கி.... எதிரியான நண்பனை கொள்வதோடு சிரிப்பு போலீஸ் நாசரிடம் சரணடையும் விக்ரமை, எங்கள் நாட்டில் களையெடுக்க வந்த கடவுளென்று கையெடுத்து கும்பிட்டு விடுதலை செய்கிறது லண்டன் "சிறப்பு" நீதிமன்றம் (பாவம் அவங்களே கன்பீஸ் ஆய்டாங்க  போல).  தன் மனைவி அனுஷ்கா நினைவாக விக்ரம் வாழ, விக்ரம் நினைவாக காதலி எமி ஜாக்சன் பின்தொடர, முடிகிறது ஒரு முரட்டு மொக்கை திரைப்படம். யப்பா போதுண்டா சாமி, இனிமே உங்க படத்துக்கு வந்தா என்ன நிக்க வச்சி கேள்வி கேளுங்கடா.

உண்மையாகவே படத்தில் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு மட்டுமே மன நிறைவை தருகிறது. லண்டன் நகரின் அழகை மேலும்  மெருகேற்றி இருக்கிறார். அனுஷ்காவின் நடிப்பு சிறப்பு. வழக்கம் போல விக்ரமின் உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக எமி ஜாக்சன் நடிக்கும் கடைசி படம் இதுவாகத்தான் இருக்கும். சந்தானம் தன் Call Sheetடை இப்படி வேஸ்ட் பண்ணுவது கடும் கண்டனத்திற்குரியது.

நன்றி,
பாமர தமிழன்    

No comments:

Post a Comment