Monday, December 12, 2011

கல்லூரிக் காலங்கள் - 1


1999 to 2002ல் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் படித்த நாட்கள், இளமை பருவத்தின் துடிப்பும், கல்லூரி நட்பின் இனிப்பும், கலந்து எங்களுக்குள் ஏற்படுத்தி விட்ட ரசாயன மாற்றங்கள் இன்னமும் எங்களுக்குள் அடங்கவில்லை. அக்கலூரி காலத்தின் பல நாட்கள் இன்னும் எங்கள் இதயத்தில் பசுமரத்து ஆணி போல் இறுகிக்கிடக்கிறது. எங்கள் உயிர் பிரியும் தருணத்திலும் அந்த நாட்களை நினைத்து, மகிழ்ந்து, பின் இறப்போம் என்றே நம்புகின்றோம்.

இனி வரும்நாட்களில், எங்கள் கலூரி காலத்தின் சில சுவையான சம்பவங்களை அசைபோடுவோம்.


நான் உட்பட பல நண்பர்கள் ஒரு மொக்க classல மாட்டிகொண்டோம், (எஸ்தர் மேடம் என்று ஞாபகம்,). அப்போது அந்த மொக்கயிளிருந்து தப்பிய ஆனந்த், ராகவன், T-Shirt கார்த்தி மூவரும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறி என்ன செய்யலாமென்று தங்கள் மண்டைக்குள் மைனா விட்டு யோசித்தனர்.

Scene 1:
இடம்: கல்லூரி வளாகத்துக்கு வெளியே, Bus Stand அருகில் உள்ள டீ கடை

பாத்திரங்கள்: ஆனந்த், விஜய ராகவன், T-Shirt கார்த்தி (கல்லூரிக்கு ஒரே ஒரு நாள் T-Shirt போட்டு வந்த பாவத்துக்காக அன்று முதல் T-Shirt கார்த்தி என்று அழைக்கபடுபவன்(பய coloru செம terroru)).

உரையாடல்:

விஜயராகவன்: என்னடா கார்த்தி, பயபுள்ளங்கே நல்லா சிக்கிக்கிட்டானுங்க போல அதுவும் எஸ்தர் madam கிளாஸ்ல.

T-Shirt கார்த்தி: நல்லா சாகட்டும்டா, நாய்ங்க. Canteenla ஒரு சிப் டீ கேட்டதுக்கு இந்த NJ பய என்ன பண்ணினான் தெரியுமா?

விஜயராகவன்: என்ன பண்ணினான், காசு கேட்டானா?? உனக்கு காசு கேட்டாலே எழவு பொத்துக்கிட்டு வருமே?

T-Shirt கார்த்தி: அது இல்லே விஜி. டீல எச்சி துப்பி வெச்சிடாண்டா.

விஜயராகவன்: ஏன்டா எச்ச நாயே. டி வேணும்னா ரெண்ருவா குடுத்து வங்கி குடி, இல்லே அந்த ஆஞான் Canteenla கடன் வாங்கியாவது குடி, அந்த எச்ச நாய் NJ பயகிட்டே பொய் ஏன் கேட்டே.

ஆனந்த்: அண்ணே Tensiona கொரை. நான் அத propera deal பண்ணீட்டேன்

விஜயராகவன்: ஏண்டா தம்பி என் மாப்ளே கார்த்தி ஒரு சிப் டீ கேட்டதுக்கு, அவன் டீல எச்ச துப்பிருக்கான் நீ பாத்துட்டு சும்மாவா இருந்தே?

ஆனந்த்: அண்ணே! பாத்துட்டு சும்மா இல்லைன்னேன்! நானும் எச்ச துப்பி வெச்சிட்டேன் ஹஹஹாஹ் ஹஹஹ்ஹா ஹ்ஹஹா

விஜயராகவன்: அட எச்ச பசங்களா இதெல்லாம் ஒரு பொழப்பு.. அந்த டீய நாய்க்கி ஏதும் ஊதீரலையே நாயே, நாய் செத்துபோயிரும்.

T-Shirt கார்த்தி: இல்லடா ராகவா அந்த டீய ராஜேஷும் பாரதியும் குடிச்சிட்டானுங்க.

விஜயராகவன்: என் மானத்த வந்குறேதே என் மூத்த தம்பி பாரதி பய தாண்டா. அந்த எச்ச பய வரட்டும் வச்சிக்கறேன் கச்சேரி. சரி சரி அவனுங்க வரதுக்கு
நேரமாகும், நம்ம அது வரைக்கும் என்ன பண்ணலாம்.

ஆனந்த்: அண்ணே!,, சின்ன அண்ணன் பாரதி வந்துட்டா என்ன கடைசி பஸ் வர வரைக்கும் காயத்திரி டீ கடையில இருந்து விட மாட்டான் அதனால இப்பவே
கிளம்பலாம்னு நெனக்கிறேன்

விஜயராகவன்: ஹய் அப்புடியெல்லாம் கிளம்பமுடியாது ராசா. வா அவனுங்க வர வரைக்கும் சரக்கடிக்கலாம்.

T-Shirt கார்த்தி: நீ தெய்வண்டா மாப்ளே.

ஆனந்த்: அண்ணே என்னைய பத்தி உனக்கே தெரியும், வேணாம், அப்பறம் வீட்ல பெரிய scene ஆயிரும் .

T-Shirt கார்த்தி: இவன் ஒருத்தன்டா, வீட்டுக்கு போய் இவங்க அப்பாவும் இவனும் கட்டி புடிச்சி முத்தம் குடுத்தா தான் தூங்குவானுங்க கொடுமைடா சாமீ.

விஜயராகவன்: வொக்காளி பெரிய நேரு பரம்பரை, அப்பாவும் மகனும் அப்புடியே கட்டிபுடிச்சி முத்தம் கொடுத்துதான் நட்புரவ வலப்பானுங்க. அப்டியே வாயிலயே மிதிக்கணும். நீ ங்கொப்பாவுக்கு Kiss அடிப்பியோ, ஓரமா போயி Piss அடிப்பியோ நாம இன்னக்கி குடிக்கிறோம்

ஆனந்த்: சரி, அண்ணன் முடிவு பண்ணிட்டே என்ன சொன்னாலும் கேட்க மாட்டே ரைட்டு விடு. டேய் ஜீயபுரதான்..... உன் நிலைமை ஊ ஊஊஊ தாண்டி வா.(T-Shirt கார்த்தி ஜீயபுரத்துகாரன்)

T-Shirt கார்த்தி: ராகவா... எங்கடா போய் குடிக்கிறது? பசங்க வந்தா நம்மள பஸ் ஸ்டாண்ட்ல தான் தேடுவாங்க. சுந்தர் செல்லுக்கு கால் பண்ணி சொல்லிரலாம்னா போன எடுக்க மாட்டேங்கறான்.

ஆனந்த்: Don't worry, I have a plan.

ஆனந்த் அதன் பின்பு கல்லூரி உள்ளிருந்து, அவர்கள் சென்ற கருவகாடு வரை தீஞ்சு போன ஒரு chock pieceஆல் map வரைந்தான். 2 kilometer தள்ளி உள்ள ஒரு கருவகாட்டில் அவர்கள் அமர்ந்து குடிக்குமிடம் வரை, வழிநெடுக Aero Mark நடு ரோட்டில் போட்டு பக்கத்தில் Rum பாட்டில் வரைந்து குறிப்பு வேறு எழுதியிருந்தான்.

Scene 2:
ஒரு மணி நேரத்துக்கு பின்:
இடம்: கல்லூரி அருகே சரக்கடிச்சான் கருவகாடு

ஒரு புறம் ஆனந்த் வழிபோக்கர் ஒருவரிடம் தான் படுத்துறங்க அவரது வேஷ்டியை கழட்டி தரச்சொல்லி அடம்பிடிக்க, வழக்கம்போல் விஜயராகவனின் போதைக்கு ஊறுகாயாக கார்த்தி சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தான்(பாவம் கார்த்தி அவன் மட்டும் சரக்கடிக்கல). ஆனந்த் போட்ட ஏரோ மார்க்கை வைத்து ஆனந்த், ராகவனையும் இவர்களிடம் சிக்கிய கார்த்தியையும் மீட்டுவந்தது திருவாளர் சோமு தலைமையிலான டீம்.

அவர்களை பஸ்ஸில் ஏற்றி காட்டூரிளிருந்து, சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழியில், ஆனந்த் மூன்றுமுறை Full Boil போட, Conductor மற்றும் Publickin கோவகனைகளை தாண்டி, காயத்ரி டீ கடைக்கு வந்துசேர்ந்தோம்

அப்பறம் வெறுப்பாகி எல்லாரும் சேந்து Sun Raise க்கு சரக்கடிக்க போனதுடன் என்ன நடந்ததுங்கறது எனக்கு ஞாபகம் இல்லை. நண்பன், ஐயர் வீட்டில் சென்று தஞ்சமடைந்ததாக தகவல்.

கல்லூரி காலங்கள் தொடரும்......

1 comment:

  1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!

    ReplyDelete