Friday, December 9, 2011

குழம்பு டிக்கா

சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இவர்களுடன் டூயட் பாடி கொண்டிருக்கும்போதே இவர்கள் இப்பொது சவுந்தர்யா அஷ்வின் மற்றும் ஐஸ்வர்யா அபிஷேகாக மாறிவிட்டது நினைவுக்கு வந்ததும் ஆட்டத்தை நிறுத்தினேன். சுதா(மனைவி) வாயால திட்டுவாங்கி, என் பையன் கால்ல மிதிவாங்கி. காலைல அகஸ்மாத்தா 8:30க்கு எழுந்து, காலை கடனை
முடித்துவிட்டு, வந்தால் (Green Tea) என்ற பெயரில் சுதா குடுத்த பானம், நான் அடித்ததிலேயே மட்டமான சரக்கான Monitorஐ விட கேவலமாக இருந்தாலும் பொருத்துகொண்டு side dish ஏதுமில்லாமலே குடித்து விட்டு, சன் நியூஸ்
சேனலை தட்டிவிட்டால் இன்றும் அதே முல்லை பெரியாரனையை உடைத்தும் உடைகாமலும் நம்ம ஊர் அரசியல்வாதிகளின் அறிக்கைதான் அங்கே ஹாட் நியூஸ். ரைட்டு விடு என்று சன் மியூசிக் மற்றும் இசையருவி channelகளை மாற்றி மாற்றி பார்த்தேன்.வழக்கம்போல சன் மியூசிக்கில் தன் புஜ பலத்தை காட்டிக்கொண்டு போன் பண்ணும் வெட்டி முண்டங்களுடன் கடலைபோட தெரியாத அம்மாஞ்சி போல ஒருவன் கடிபோட்டுகொண்டிருக்க. இசையருவியில் தன் குறுந்தாடி அழகை ரசித்து புகழ்ந்த பெங்களுரு அழகிகளிடம் வழிந்து கொண்டு இருந்தான் ஒருவன். இப்படியாக கழிந்தது என் காலை பொழுது.

சரி மணி வேறு 9:45 ஆகிவிட, விருப்பமே இல்லாத அந்த எழவெடுத்த வேலைக்கு பொய் தொலைக்க வேண்டுமே என்று குளித்து கெளம்பி சுதா சுட்டு கொடுத்த வழக்கமான தோசையை ருசித்து உண்டு விட்டு(எங்கள் வீட்டில் வாரத்தில் ௧௧ நாட்கள் காலையும் மாலையும் தோசைதான்) முக்கால் கிலோமீட்டர் நடந்து வந்து பஸ் ஏறி கடைசி சீட்டில் உட்கார்ந்தேன். speed breakerரில் பஸ் ஏறி இறங்கியதும் என் தலை பஸ்சின் மேற்கூரையை தொட்டுவிட்டு வந்தது, நல்லா தானே போய்கிட்டிருக்கு ஏண்டா இப்புடி என்று நினைத்துக்கொண்டிருக்கயிலேயே என் நிறுத்தம் வந்தடைந்தது பஸ். அங்கு இறங்கி இன்னொரு பஸ் (VOLVO A/C) பிடித்து ஆபீஸ் வந்தடைந்தேன் (இங்கும் ஒரு கிலோமீட்டர் நடக்கணும்). ஷ்ஷ்ஷ்ஷ் அப்பா இப்பவே கன்ன கட்டுதே என்றபடி என் deskகை வந்தடைந்த பொது மணி 11:45.

சுற்றும் முற்றும் ஒரு நோட்டம் விட்டேன். என்னருகே இருக்கும் டெஸ்கில் அமரும் பரத் ராமச்சந்திரன் மற்றும் சில தலைகள் மட்டுமே வந்திருந்தனர். என் துறைத்தலைவர் உட்பட பலர் இன்னும் வந்திருக்கவில்லை(இந்த_____கா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி வந்தோம் என்று நினைத்துகொண்டு என் மடிகணினியை சுவிட்ச் on செய்தேன். அது on ஆவதற்குள்(குறைந்தது 5
நிமிடங்கள் ஆகும், பல Passwordகள் குடுக்க வேண்டும் Securityயாம் சுண்டக்காய்) இரண்டு நாட்கள் முன்பு பரத் ராமச்சந்திரன் என் ரிங் டோனை கேட்கவேண்டு என்றது நினைவிற்கு வர அவரிடம் நினைவுபடுத்தினேன். அவர் என்
கைபேசிக்கு அழைக்க அது "Hello Hello Mic Testing 1 2 3 என்னையா கோர கோரணு கேக்குது என்னத்தயாவது கொண்டாந்து குடுதுவுட்டுட்டு போயிறீங்க உங்கபாட்லே" என்று அலற ஆபீசில் சிரிப்பலை.

ரிங் டோன் சத்தம் இன்னொரு துறைதலைவியான முத்துமங்கை காதை உறுத்த அவர் அங்கிருந்து எழுந்து வந்து இது என்ன சுதா கால் பண்ணினா வர்ற ரிங் டோனா என்று கேட்டு என்னை கலாயப்பதாக நினைத்து அவரே சிரிக்க நான் அதை சற்றும் சட்டை செய்யாமலிருப்பதை பரத் கவனித்துவிட்டு அந்த மங்கை தொப்பிவாங்கியதை மறைப்பதற்காக எங்கள் கவனத்தை திசை திருப்ப முற்பட்டு, பெங்களூருவில் இந்திராநகரில் ஒரு செட்டிநாடு அசைவ உணவகம் திறந்திருக்கும் செய்தியை சொன்னதும். செட்டிநாடு மக்களான எனக்கும் முத்துமங்கைக்கும் எங்கள் ஊர் உணவு ஞாபகம் வர, நாங்கள் உணவை பத்தி பேச
ஆரம்பித்தோம் அதில் பேச்சு எங்கெங்கோ பொய் கடைசியில் குழம்பு டிக்கா பக்கம் வந்து சேர்ந்தது. குழம்பு டிக்கா என்றால் என்னவென்றே தெரியாது என்று சொன்ன பரத் ராமச்சந்திரனுக்கு குழம்பு டிக்கா செய்வது எப்படி என்று விளக்கி சொன்னதுடன் முடிந்தது எங்கள் அரட்டை அரங்கம்.

அவரவர் வேலையை பார்க்க அவரவர் இருக்கைக்கு செல்ல காலையில் அதுவும் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை காலையிலேயே குழம்பு டிக்கா ஞாபகம் வந்துவிட்டால் எப்படி இனி வேலை செய்வது?
பசுபதி விட்ரா போகட்டும்....

5 comments:

  1. Ada pavi adutha varam neeyavadhu kuzhambu tikka trichy poi sapturuva. ipdi enna idha padika solli nyabaga paduthitiye da....
    (unaku soundharyave over idhula aishwarya rai veraya)

    For Anni, inimel Teannu vaya thiranthanna.. sudu thannia vayila oothunga..

    Inganam,
    JP.

    ReplyDelete
  2. Ippa Yethuku Intha Post??? Adi ku onnu Ammavasai ku Onnu nu???? WHAT is it that your trying to imply here???????

    Idhula, veetula samaichu kuduravangalae vera keli pechi.....

    ReplyDelete
  3. FOR JP : Naan ippoveay kuzhambu tikka sapiduveneay...! Pimbiliki pileaypi 3 pulli 1 aacharyakuri..

    Dai nara vaya unakku pozhudhu pogama koothadikiriya da panni

    ReplyDelete
  4. மூடி கெடந்த என் கன்ன தெறந்து வெச்சிடீங்க. உங்க பேரென்ன? கில்லாடி கீரவடயா இல்லே அம்பானி ஆமவடயா?

    ReplyDelete
  5. Bharathi, nallaa vandi ooduthu pola :)

    ReplyDelete