என் தொழில் சார்ந்த
மனிதர்களை நான்கு வகையாக பிரித்துப் பார்க்கிறேன். 1) மாணவர்கள், 2) பண்டிதர்கள், 3) பண்டித மாணவர்கள், 4) மாணவ
பண்டிதர்கள்.
1. மாணவர்கள்:
எப்பொழுதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள். பரிச்சார்த்த முயற்ச்சிகளை
செய்யத் தயங்காதவர்கள். (என் வாழ்நாள் முழுவதும் நான் இந்த வகையை செர்ந்தவனாகவே
இருக்க விரும்புகின்றேன்.)
2. பண்டிதர்கள்:
இவர்கள் அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நிலையை அடைந்தவர்கள். கற்றுக்கொள்ளும்
நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு promotion பெற்றவர்கள். அறிவுரை கூறுபவர்கள். நம் வீட்டு
பெரியவர்கள் போல் சற்று பழமைவாதம் பேசக்கூடியவர்கள். ஆனால்
சாதனையாளர்கள்.
3. பண்டித
மாணவர்கள்: இது ஒரு
உயர்ந்த நிலை. இவர்கள் பண்டிதர்களுக்கு இணையானவர்கள் ஆனால் மாணவத் தன்மையை
இழக்காத்தவர்கள். கற்றுகொள்ளும் திறன் தங்களை விட்டு போகாது
தக்கவைத்துகொள்பவர்கள். கடின உழைப்பும், புத்தி கூர்மையும் மட்டுமின்றி எப்பொழுதும் updatedஆக
இருப்பார்கள். புது புது முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். அதில் வெற்றியும்
பெறுவார்கள். இந்த வகையை சேர்ந்தவர்கள் சரித்திரத்தில்
முக்கியமான இடம் பிடிப்பார்கள்.
4. மாணவ
பண்டிதர்கள்: மாணவ நிலையில் இருக்கும்போழுதே தங்களை பண்டிதர்கள் என்று என்னிக்
கொண்டிருப்பவர்கள். உலகில் அனைவருமே அறிவில் தங்களுக்கு கீழ் நிலையிலிருப்பவர்கள்
என்று நினைப்பவர்கள். இவர்களிடம் வெட்டி ஜம்பம் அதிகமிருக்கும். அனைத்து
விஷயங்களும் தங்களுக்கு தெரியுமென்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள். அடிக்கடி
வெட்டி விவாதத்தில் ஈடுபடுபவர்கள். நான் பறந்த ஹெலிகாப்டருக்கு ஏழு வால்
என்பவர்கள். இவர்களிடம் விவாதிப்பதை விட பழனி அடிவாரத்தில் போய் விபூதி
விற்கலாம்.இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகம். எந்த மூலையிலும் இவர்களை
காணலாம்.
மாணவ நிலையிலிருக்கும்
எனக்கு பண்டிதர்களிடமிருந்தும், பண்டித மாணவர்களிடமிருந்தும்
கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. ஆதலால் இவர்களிடம் பணிவாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இந்த மாணவ பண்டிதர்களை
கண்டாலே உஷ்ணமாகி, ரட்சகன் நாகர்ஜுன போல் நரம்பு புடைகிறது.
பின் BP Tablet போட்டு அடக்க வேண்டியிருக்கிறது. கடவுளென்று
ஒருவன் இருக்கிறான் என்றால் அவரிடம் நான் வேண்டிக்கொள்வது “கடவுளே
என்னை இந்த மாணவப் பண்டிதப் பயகளிடமிருந்து காப்பாற்று."
No comments:
Post a Comment