Tuesday, January 3, 2012

2011ல் என்னை கவர்ந்த திரைப்படங்கள்

2011ல் வெளிவந்து, இதுவரை நான் பார்த்ததில் என்னை கவர்ந்த  படங்கள் இவை. இதே வருடம் வெளிவந்து நான் பார்க்காத படங்களில் நல்ல படங்கள் இருக்கலாம். பட்டியலில் நான் குறிப்பிடாத வேறு நல்லபடங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்னை கவர்ந்தால் கண்டிப்பாக இந்த பதிப்பை புதுப்பிப்பேன்.

ஆரண்ய காண்டம்
அற்புதமான திரைக்கதை, அருமையான இயக்கம், சுருக்கமான வசனங்கள், சிறப்பான ஒளிப்பதிவு, மிக நேர்த்தியான நடிப்பு, படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை என்று 2011ல் என்னை முழுவதும் கவர்ந்த மிக குறைந்த படங்களில் ஆரண்யகாண்டம் மிக முக்கியமான திரைப்படம். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜனுக்கு ஒரு தனியிடம் தமிழ் சினிமாவில் காத்திருக்கிறது.

குறைகள்: It's an "adults movie". தமிழில் சொன்னால், குடும்பத்துடன் பார்க்க இயலாது. தனித்தனியாக சென்று பார்க்கலாம்.

வாகைசூட வா

அறுபதுகளில் நடக்கும் கதை, மிகச்சிறந்த திரைக்கதை, சிறப்பான வசனங்கள், நேர்த்தியான கலை, மற்றும் ஒளிப்பதிவு, நல்ல இயக்கம் என வரலாற்றில் இடம்பெறக்கூடிய படைப்பு, வாகை சூட வா.  இனியாவின் பாத்திரப்படைப்பு அருமை. இயக்குனர் சற்குணம் முதன்மை நிலை இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்.

குறைகள்: குறைகளென்று ஒன்றும் இல்லை.



மயக்கம் என்ன
செல்வராகவன் இயக்கத்தில் முதிர்ச்சி தெரிகிறது. என்னை முழுமையாக கவர்ந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ரிச்சா இரண்டாம்பாதியில், அருமையாக பொருந்துகிறார். அணைத்து துறைகளிலும் தேர்ந்த ஒரு நல்ல திரைப்படம்.

குறைகள்: இதுவும் வயதுவந்தோர் மட்டும் பார்க்ககூடிய திரைப்படம். வேறேதும் குறைகள் எனக்கு தெரியவில்லை.

 
ஆடுகளம்
சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. வெற்றிமாறன் இயக்கத்தில் மிகவும் நேர்த்தியாக அமைந்த படம். பாடல்கள், ஒளிபதிவு, இயக்கம், நடிப்பு, பின்னணி இசை என்று அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், கடைசியாக நம் மனதில் நிற்பவர் வில்லன் நடிகருக்கு  மிக நேர்த்தியாக குரள் கொடுத்த திரு ராதா ரவி அவர்களே.

குறைகள்: படத்தின் முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் இல்லை. கொஞ்சம் சுருக்கமாக முடித்திருக்கலாம்.          

ஆண்மை தவறேல்
இதுவரை சொன்ன அணைத்து படங்களும், நல்ல படங்களாக இருக்கும் என்று தெரிந்து பார்த்த படங்கள். அனால், ஆண்மை தவறேல் எதேட்சையாக பார்த்த படம். ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும், மிக சிறப்பாக படமாக்கபட்டிருக்கிறது. தமிழில் நான் பார்த்த ஆங்கில தழுவல் படங்களில், சிறந்த படமாக இதையே கருதுகிறேன்.

குறைகள்: டூயட் பாடல், Flash Back காட்சிகள்.


அழகர் சாமியின் குதிரை
சிறுகதையை படமாக்கி அதில் வெற்றிபெற்றிருக்கும் சுசீந்திரனின் காட்சி அமைப்பு மிகவும் பாராட்டிற்கு உரியது. குடும்பத்துடன் பார்த்து, சிரித்து, சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அடங்கிய திரைப்படம்.

குறைகள் : தேவையற்ற பாடல்கள், இரண்டாம் பாதியை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.
 


நடுநிசி நாய்கள்
படம் பார்த்த பின் கண்டிப்பாக தூங்க முடியாது. அருவெறுப்பு இருக்கும், வெறுப்பு இருக்கும், கடுப்பு இருக்கும். ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள் என்று தோன்றும். But, It's technically well picturised movie. கௌதம் மேனனின் தைரியமான முயற்சி பாராட்டிற்குரியது.

இவை தவிர எனக்கு பிடித்த மற்ற திரைப்படங்கள்:
தெய்வ திருமகள்
மங்காத்தா
கோ
வானம்
போராளி
எங்கேயும் எப்போதும்  

1 comment: