Thursday, December 29, 2011
வேலாயுதம் - விஜய்க்கு தேவை தம்.
விஜய் நடிப்பில், ரீமேக் ராஜா இயக்கத்தில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க வெற்றிவாகை சூடியிருக்கும் latest விஜய் படம் வேலாயுதம் (ஏழாம் அறிவு மொக்கயானதால்). முதல் காட்சியில், என்னடா இது, தியேட்டர் மாறி கேப்டன் படத்துக்கு வந்துட்டமோன்னு ஒரு பீலிங். Yes , பனிமலை பயங்கரவாதிகள் தமிழகத்தை தாக்க திட்டம், அதுக்கு உதவப்போவது, தமிழகத்தின் உள்துறை அமைச்சர். கேப்டன் இருந்திருந்தா கிண்டி கிழங்கெடுதிருப்பார். பாவம் விஜய், கொஞ்சம் தெனருகிறார்.
அந்த உள்துறை அமைச்சரின் கட்டளைப்படி சென்னையில் வெடிகுண்டு வைக்க திட்டமிடும் சமூக விரோதிகளை, Freelancing journalistஆன ஜெனீலியாவும், அவரது நண்பர்களும், ரகசிய படம் பிடிக்கும்போது சிக்கிகொள்கின்றனர். அதில் ஏற்படும் களேபரத்தில், ஜெனிலியா பலத்த காயம் அடைய, அவரது நண்பர்கள் கொல்லபடுகின்றனர். சில அடியாட்கள் தற்செயலாக செத்து மடிய, காயம் பட்ட ஜெனிலியா, இவர்களது திட்டத்தை தற்காலிகமாக தடுப்பதற்காக, "இனி வெடிக்க இருக்கும் வெடிகுண்டுகளையும் தடுப்பேன்" என்றும், "இதற்க்கு பின்னால் இருப்பவர்கள் கதியும் இனி இப்படிதான் ஆகும், இப்படிக்கு வேலாயுதம்" என்றும் வெள்ளைத்தாளில் எழுதி இறந்த சமூக விரோதிகள் அருகில் வைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிடுகிறார். இது தமிழகம் முழுவது பரபரப்பாகிறது, யாரந்த வேலாயுதம், யாரந்த வேலாயுதம் என்று மீடியாக்கள் பரபரக்க எங்கள் அண்ணன் விசய் intro.
கிராமத்தில், ரயிலை வழிமறித்து நிறுத்தி, தங்கை, கொழுக் மொழுக் கொழுக்கட்டை ஹன்சிகா மற்றும் பல உறவினர்களுடன், ஊர்மக்கள் ஆர்பரிக்க சென்னைக்கு ரயிலேருகிறார் தலைவர் வேலாயுதம் விஜய் . இனி என்ன? இந்த வேலாயுதம் அந்த வேலையுதமாவது தான் கதை. ஆடல், பாடல் என்று typical விஜய் பட கலகலப்பிற்கு பஞ்சமில்லாத முதல்பாதி. ஹன்சிகா, சந்தானம், போன்றோர் உதவியுடன் சலிக்காமல் செல்கின்றன காட்சிகள். அபூர்வ சகோதரர்கள், "உன்னை நெனச்சேன், பாட்டுபடிச்சேன்" பாடல் பின்னணியில், பாஸ்கர் மண்டிபோட்டு நடக்க, சந்தானம் கலாய்ப்பது நல்ல நகைச்சுவை. ஆனால், இந்த தெலுங்கு வில்லன், பயங்கரவாதிகள், போன்ற வழக்கமான கதை தான் நம்மை கொட்டாவி விட வைக்கிறது. மன்னர் செங்கிஸ்கான் பொருட்காட்சி என்று எங்கோ சென்று, அங்கு துரத்தும் போலீசிடம் சிக்காமலிருக்க மன்னரின் உடையை அணிந்து வரும் விஜய், பார்ப்பதற்கு பாதாள சாக்கடையில் பெருச்சாளி புடிப்பவன் போலவே இருக்கிறார்.
மற்றபடி, வில்லன்களை எப்படியும் விஜய் துவைத்தெடுத்து தமிழகத்தை காப்பாதிவிடுவார் என்பது பச்சை குழந்தைக்கு கூட தெரிந்த விஷயம். பயங்கர வாதிகளை பிடித்து கொடுத்தபின் விஜய் ஊர் திரும்புகிறார். படம் முடியபோகுது எல்லாரும் வீட்டுக்கு போகலாம் என்று நினைக்கையில், "படம் இன்னும் முடியல எல்லாம் உக்காருங்க" என்கிறார் திருவாளர் ரீமேக் ராஜா. (இந்த இடத்தில "இனி விஜய் ரசிகர்கள் மட்டுமே இங்கே இருக்கலாம் மற்றவர்கள் கெளம்பலாமென்று ஒரு டைட்டில் போட்டிருக்கலாம்".) தப்பிய பயங்கரவாதிகளில் ஒருவன், தங்கையின் நிச்சயத்தில் வெடிகுண்டு வைக்க, தங்கை மரணம். அதன் பின் விஜய் வெகுண்டெழுந்து MA சிதம்பரம் stadium சென்று வில்லர்களை மக்கள் முன்னிலையில் துவம்சம் செய்து, மந்திரியை மண்ணோடு மண்ணாக்குகிறார். சட்டையில்லாமல் தன் புஜ பலத்தை காட்டி சண்டையிடுகிறார். "What a Man" என்று சொல்ல அப்பாஸ் இல்லாதது மட்டும்தான் குறை. நம் மண்டை காய்ந்து முடி கொட்டி வழுக்கை தலையுடன் தான் தியேடரிளிருந்து வெளிவரவேண்டுமென்பது ரீமேக் ராஜாவின் விருப்பம்போல.
விஜய் தன் படத்தை பார்ப்பதற்கு அவருக்கே அழுப்பு தட்டாமல் இருப்பது தான் ஆச்சர்யம். இனியாவது விஜய் கொஞ்சம் தைரிமாக, பூவே உனக்காக, Friends, வசீகரா, காவலன் போன்ற நல்ல படங்கள் நடித்தால் மக்களுக்கு நன்று.
Overall, It 's a Tipical Vijay Movie !
கவுண்டர் காதில் ரத்தம் வழிய வழிய அழுதுகொண்டே: டேய் வண்டுருட்டான் தலையா ஏண்டா சொல்லல?
செந்தில்: அண்ணேன்..........
கவுண்டர்: டேய் பச்செள புடுங்கி, ஏண்டா சொல்லல?
செந்தில்: அண்ணேன்.......... வந்து...
கவுண்டர்: டேய் கப்ளிங் வாயா... அப்பைலருந்து அண்ணேன் அண்ணேன்னு சொல்றியே, உள்ள பெருச்சாளி புடிக்கிறவன் இருக்கான்னு ஏண்டா சொல்லல?
செந்தில்: அது இல்லைன்னேன், நீங்க வந்து...பாத்துட்டு ஒரு முடிவெடுப்பீங்கன்னு.........
கவுண்டர்: வந்து பாத்துட்டு, உள்ளயே body ஆகிருவான், இவன் பொண்டாட்டிய இழுத்துட்டு ஓடிரலாம்னு பிளான் பண்ணுனியா?
செந்தில்: இதுக்கு எவளோ செலவானாலும் பரவல்ல, நீங்களே ஒரு பைசல் பன்னிவுடுங்கண்ணேன்.
கவுண்டர்: அடிங்க நரிவால் தலையா...... இவ்வளவு நடந்தும் நீ, அதுலயே தான் குறியா இருக்கியா.......கம்முனாட்டிபலே
கதை: மொக்கை கதை
திரைக்கதை: பரவாயில்லை
வசனம்: பரவாயில்லை
இயக்கம்:பரவாயில்லை
பின்னணி இசை: சொல்வதர்க்கொன்றுமில்லை
பாடல்கள்: சுமார்
ஒளிப்பதிவு: நன்று
Subscribe to:
Post Comments (Atom)
மன்னர் செங்கிஸ்கான் பொருட்காட்சி என்று எங்கோ சென்று, அங்கு துரத்தும் போலீசிடம் சிக்காமலிருக்க மன்னரின் உடையை அணிந்து வரும் விஜய், பார்ப்பதற்கு பாதாள சாக்கடையில் பெருச்சாளி புடிப்பவன் போலவே இருக்கிறார்.
ReplyDeleteIdhu Nachu comment!!! ROFL...ROFL...
Last Gounder vanthu mudichi vaikuradhu SUPER o SUPER....